கங்காபுரம்
அ.வெண்ணிலா எழுதிய வரலாற்று நாவலின் மதிப்புரை. எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. https://www.jeyamohan.in/136575/
ஐநூத்தி ஐம்பத்தி ஐந்து பக்கங்கள் கொண்ட நாவல். முதல் பாகம், கங்காபுரம் ராஜேந்திரனின் மனதில் உருவான விதம். “அகவை ஐம்பதை தாண்டிய, பெயர்மைந்தர்களை பெற்றுவிட்ட ராஜேந்திர சோழனுக்கு,எந்த காரணத்தால் இளவரசு பட்டம் சூட்டாமல் காலம்தாழ்த்தினான் ராஜராஜசோழன்” என்பதை மிக விரிவாக, பல தளங்களில் வழியே விளக்குகிறது. இரண்டாம் பாகம், கங்காபுரம் வடிவான விதம். கங்கைகொண்ட சோழபுரம் உருவாக ஊற்றுமுகமாக அமையும் தருணங்களை, அதனூடாக பின்னப்பட்ட சிடுக்குகளை, வாழ்நாள் முழுவதும் “பேரொளிக்குள் மங்கிய அகல் விளக்காய்” மனம் குமைந்து தத்தளிக்கும் ராஜேந்திர சோழனை, அரசனின் படைநகர்வுகளை, சித்தரிக்கிறது.